×

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் என்ற துறை உருவாக்க ரூ.5 கோடி; 2021ம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதி, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகை, தமிழறிஞர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று  வழங்கினார்.

புதுடெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்தி துலிப்புடி பண்டிட்டிடம் வழங்கினார்.

தமிழறிஞர்களான நெல்லை செ. திவான், விடுதலை இராஜேந்திரன், நா. மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு, இவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார். மறைந்த தமிழறிஞர்கள் நெல்லைகண்ணன் நூல்களுக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், கந்தர்வன் என்கிற நாகலிங்கம் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, சோமலெ நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ந. ராசையா நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தஞ்சை பிரகாஷ் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்காக அவர்களின் மரபுரிமையரிடம் வழங்கினார்.

2021 ம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுகள்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசிதம்பரம், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் மா. சோதி , ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாயழகு , ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துரத்தினம் , கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆ.நாகராசன் , கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கடவூர் மணிமாறன் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரா. துரைமுருகன் , கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சு. கந்தசாமி பிள்ளை , காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த ரா. எல்லப்பன் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தினகுமார் , கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மானூர் புகழேந்தி,சிவங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வ. தேனப்பன் , செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.கே. சுப்பிரமணியன் , சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வே. மாணிக்காத்தாள் , சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரா. மோகன் குமார் , தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுக சீதாராமன் , தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் கண்ணிமை , திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துரை. தில்லான், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த க. பட்டாபிராமன் அவர்களின் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்,திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ. லோகநாதன் , திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த க. பரமசிவன் , திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கு. சண்முகம் , திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முக வடிவேல் , தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அ. கணேசன் , தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆ. சிவராம கிருஷ்ணன் , தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தேனி சீருடையான், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மு. சொக்கப்பன் , நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சி. கைலாசம் , நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த போ. மணிவண்ணன் , புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீ.கே. கஸ்தூரிநாதன் , பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செ. வினோதினி , மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நெல்லை. ந. சொக்கலிங்கம் , மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ச. பவுல்ராஜ் , விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அ. சுப்பிரமணியன் , விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பேராசிரியர் ப. வேட்டவராயன் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ம. நாராயணன் ஆகிய 38 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருதுடன், விருதுத்தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், தமிழ் வளர்ச்சி இயக்குநர் அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Jawaharlal Nehru University ,Delhi ,Chief Minister ,M.K.Stalin. , 5 crores to create a Department of Tamil Literature in Jawaharlal Nehru University, Delhi; Tamil Semmal Award 2021: Presented by Chief Minister M.K.Stalin
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...